states

காக்கி கால் சட்டை ஆர்எஸ்எஸ்காரர்கள்தான் 21-ஆம் நூற்றாண்டின் ‘கவுரவர்கள்’

சண்டிகர், ஜன.10- நாட்டில் தற்போதும் குருஷேத்ர யுத்தம்  நடக்கிறது; இந்த சித்தாந்த யுத்தத்தில், காக்கி கால்சட்டையுடன் லத்தி ஏந்திய ஆர்எஸ்எஸ்-காரர்கள்தான் 21-ஆம் நூற்றாண்டின் கவுர வர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திங்கட்  கிழமையன்று ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் தனது ‘இந்திய ஒற்றுமைப் பயணத்தை’ மேற்கொண்டார். அப்போது, “மகாபாரத காவியத்தில் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் நடந்த மாவட்டம் ஹரியானாவின் குருஷேத்ரா” என்பதை நினைவுபடுத்திய ராகுல் காந்தி, “21-ஆம்  நூற்றாண்டிலும் கவுரவர்கள் இருக்கிறார் கள்.. அவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, “அந்த கவு ரவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை  அணிந்து, கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள். இந்தியாவின் 2-3 பில்லியனர்கள் அந்த கவு ரவர்களுடன் இருக்கிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சாடியுள்ளார். மேலும் அவர், “பாண்டவர்கள் எப்போதா வது ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டார் களா? பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார்களா? தவறான ஜிஎஸ்டி- யை அமல்படுத்தினார்களா? அவர்கள்  எப்போதாவது இதுபோன்று செய்திருக்கி றார்களா? ஒருபோதும் இல்லை. ஏனென்  றால், பணமதிப்பு நடவடிக்கை, தவறான  ஜிஎஸ்டி கொள்கை, விவசாயச் சட்டங்கள்  ஆகியவை இந்த நிலத்தை தபஸ்விகளிட மிருந்து திருடுவதற்கான ஒரு வழியாகும்” என்று அவர்கள் அறிந்திருந்தனர் என்று கூறினார்.